IPL 2024 Auctions | டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் அணி!

IPL 2024 Auctions | டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் அணி!
By: TeamParivu Posted On: December 19, 2023 View: 43


துபாய்
துபாயில் நடந்துவரும் ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது. இந்த ஏலத்தின் முக்கிய அம்சங்கள்:
  • இலங்கை அணி வீரர் வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியது.
  • உலகக் கோப்பை தாக்கத்தை ஏற்படுத்திய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • விபத்தில் சிக்கி கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதல்முறையாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டார்.
  • முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது.
  • இரண்டாவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது.
  • உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹெட்டிற்காக கடுமையாக போராடிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ஏலத்தில் வென்றது.
  • Unsold வீரர்கள்: இந்திய வீரர்கள் மனீஷ் பாண்டே, கருண் நாயர், ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
ரூ.20.5 கோடி... ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். அவரை ரூ.20.5 கோடிக்கு வாங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்ட அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டன. ரூ.7 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க ஆர்வம் காட்டியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகமும், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் குதிக்க ஏலம் சூடுபிடித்தது. சன்ரைசர்ஸ் ரூ.12 கோடி என விலையை அதிகரிக்க, ஆர்சிபி அதை ரூ.17 கோடி ஆக்கியது. இறுதியில் ரூ.20.5 கோடிக்கு அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதன்மூலம் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை படைத்தார் கம்மின்ஸ். இதற்கு முன் பஞ்சாப் அணி ரூ.18.5 கோடி கொடுத்து இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை வாங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது.
சென்னை அணியில் ரச்சின், ஷர்துல்: உலகக் கோப்பை தாக்கத்தை ஏற்படுத்திய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேபோல் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி. இதற்கு முன்பும் ஷர்துல் சென்னை அணிக்கு ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ். இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு இம்முறை ஏலத்தில் அதிக டிமாண்ட் இருந்தது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் தொடங்கி, ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடுமையான போட்டிக்கு பிறகு ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில் அதனை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். தற்போது நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியிருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஏலத்தின் 4வது செட்டில் இந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஸ்டார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா அணி நிர்வாகம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஸ்டார்க்கை கைப்பற்றியது. அதேநேரம் ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கும், ஷிவம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி மேற்கிந்திய தீவு வீரர் அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சேத்தன் சக்கரியாவையும், கேஎஸ் பரத்தையும் கொல்கத்தா நிர்வாகம் தலா ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன. மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள். மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் ஐசிசி உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள். மீதம் உள்ள 218 பேர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரர்கள் ஆவர். இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க உள்ளன.
மினி ஏலத்தை வழிநடத்தி வருகிறார் மல்லிகா சாகர். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் பெண் ஏலம் விடுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மல்லிகா சாகர். இதற்கு முன் இவர் WPL,PSL போன்ற பல தொடர்களின் ஏலம் விடும் பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஏலம் வரலாற்றில் முதல்முறையாக இந்நிகழ்வை பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். முக்கிய அம்சங்கள்:

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..